• சென்னை, ஜனவரி 3, 2009.

    இது முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டப்பட வேண்டிய நேரம்

    நாங்க, நீங்க, அவுங்க, இவுங்க என்று அனைவருமே மிகச்சிறப்பாக பொது நல சேவை செய்து வருகின்றோம்.

    ஒவ்வொருவரையும், முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டுவோம்.

    இன்றைய சமுதாயத்தில் உள்ள நல்லது, கெட்டதுகளை கூட்டிக்கழித்து பார்த்தால், சமுதாயம் வெகு சிறப்பாக முன்னேறி வருவது தெளிவாக தெரிகின்றது.

    அனைத்துதரப்பினருமே, மிகுந்த சமுதாயப் பொறுப்போடு, பொதுநலத்தோடு சிந்தித்து, சொல், செயல், எழுத்து மூலம் சிறப்பான சேவையாற்றி வருகிறார்கள்.

    எழுபது, எண்பது வயதினை தாண்டிய பெரியவர்களை, அவர்களது பொறுப்பற்ற செயலினால்தான் சமுதாயம் இவ்வளவு சீரழிந்து விட்டது என்று ஆசைதீர, மனசார திட்டி தீர்த்தாகிவிட்டது.

    இனியும், அந்த பெரியவங்களை வசைபாடுவது சரியாகாது. எழுபது, எண்பது வயதினை தாண்டிய பெரியவங்களை, இனி, அன்பினை மட்டுமே காட்டி, மரியாதை செலுத்துவோம்.

    இது, அடுத்தகட்ட பெரியவங்க, ஐம்பது, அறுபது வயதினை தாண்டியவர்கள், பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சமுதாய சேவையாற்றிடும் நேரம்.

    அந்த இன்றைய தலைவர்கள் அனைவருமே, சிறப்பான தலைவர்களாக உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள்.

    சமீபகாலத்தில், புதிய மதம் ஏதுவும் தோன்றவில்லை. சமீபகாலத்தில், புதிய ஜாதி ஏதுவும் தோன்றவில்லை. சமீபகாலத்தில், புதிய கட்சி ஏதுவும் தோன்றவில்லை.

    ஆக, மக்களை பிளவுபடுத்தும் இயக்கங்கள் ஏதுவும் உருவாகவில்லை.

    அந்த உண்மையை உணரும்போது, சமுதாயம் நல்லதோர் முன்னேற்றம் அடைந்து வருவது தெளிவாகத் தெரிகின்றது.

    ...மேலும் வளரும்.