அயன் - இன்றைக்கு எல்லோர் மனதிலும் நிற்கும் படம். சூரியாவின் நடிப்புக்குக்காகவோ, அல்லது கதைக்காகவோ, மனதில் நிற்ப்பதில்லை. விளம்பரம், விடாத விளம்பரத்தினால், எல்லோர் மனதிலும் பதிந்து இருக்கின்றது.
அலுவலகத்துக்கு செல்லும்போது அல்லது கடைவீதிக்காக வெளியே செல்லும்போது, மனதைவிட்டு மறைந்துப் போய்விடும். மீண்டும் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, விடாத விளம்பரத்தினால், மக்கள் மனதில் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.
கொஞ்சம் இடைவெளி விட்டால், மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு சிந்திக்க சந்தர்ப்பமே கொடுக்காமல், விடாத விளம்பரத்தினால், மக்கள் மனதில் பதிவு, தொடர்ந்து செய்யப்படுகிறது.
சிறிது மாதங்களுக்கு முன்னால், மக்கள் மனதில் பதிந்த வசனம், தணுஷ் பேசும், “ எங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்.” இன்னைக்கு , அந்த படம், மக்களின் மனதில் இருந்து மறைந்திருக்கும்.
அதுக்கு முன்னால், நாக்க முக்க பாட்டு இருந்த படம். ஆக , அடுத்து புதுச படம் வரும். அயன் – மக்கள் மனதிலிருந்து மறைந்துப் போய்விடும்.
அந்தக்கால சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி, ஸ்ரீதர், பாலச்சந்தர் படங்கள், தரத்தினாலும் , குணத்தினாலும், மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கும். அது காலத்தினால் அழியாத காவியங்களாக திகழும்.
விளம்பரம் நிறுத்தப்பட்டாலும், மக்கள் மனதில் தொடர்ந்து இருக்கும்நிலையே மேலானது. மக்கள் மனதில் இடம்பிடிப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. மனிதகுலத்துக்கு நல்லதோ கெட்டதோ, மிகப்பெரிய அளவில் செய்தால்தான், மனதில் இடம் தருவார்கள், மக்கள். அதுவும் மிகச்சிறப்பான செயல்களையும், சிந்தனைகளையும்தான், இன்றைய மக்கள், வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வார்கள். அதன்மூலம்தான், காலம்காலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் கிடைக்கும்
மக்கள், தலைவர்களின் சாதனை பட்டியலை, மனதில் வைத்துக் கொள்வதில்லை. தலைவர்களின், ஒரே ஒரு செயல்தான், மக்களின் மனதில் பதிவாகிறது. பட்டியல்களுக்கு மனதில் இடமில்லை.
ஹிட்லரை மக்கள் நினைக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் முன்னேறிய, வோல்ஸ்வேகன், மெர்ஸிடீஸ், பி.எம்.டபுள்யூ தொழிற்சாலைகள் வருவதில்லை. சிகரெட், மது எல்லாம் கட்டுப்பாடாக இருந்த தேசத்தைப்பற்றிய சிந்தனை வருவதில்லை. சுபாஷ் சந்திர போஸுக்கு உதவ முன்வந்ததின்மூலம், ஆங்கிலேயரிடமிருந்து, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுக்கவந்த நல்லதோர் முயற்சியை, மக்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நல்லவேளை, ஹிட்லர்மூலம், நாம் சுதந்திரம் அடையவில்லை.
ஹிட்லரின் சாதனை பட்டியல், மக்கள் மனதில் இடம்பெறவில்லை. ஹிட்லரின், மனிதகுலம் அழிவுச்செயலே, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று, நிலைத்து இருக்கின்றது.
அதேபோல், காந்தியை நினைக்கும்போதும், அவரது சாதனை பட்டியலை மக்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. காந்தியின் ஒரே ஒரு செயல்தான் மக்கள் மனதில் இடம்பெறுகிறது. இந்திய மக்களுக்கு சுதந்திரம் வாங்கித்தர அவர் எடுத்துக்கொண்ட முயற்சியே, மக்களின் மனதில் நீங்காஇடம் பெற்று இருக்கின்றது. இந்தியா, சுதந்திரம் அடையாமல் இருந்திருந்தாலும், மக்களின் மனதில், காந்திக்கு நிச்சயம் இடம் இருந்திருக்கும்.
அந்த புதுமையான முயற்சி; நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி, தம் மக்களை பலிகொடுக்காத செயல்; ஆங்கிலேயரின்மேல் வெறுப்பை வளர்த்து, அவர்களை அழிக்கும் செயலில் ஈடுபடாதது; மனிதகுல வரலாற்றிலே, புதுமையான சிந்தனை. சிந்தனை எல்லோருக்கும் எளிதாக வரும். ஆனால், அதை செயல்படுத்த, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி. காந்திக்கு விளம்பரம் தேவையில்லை. வருங்கால சந்ததியினரும், அவரு யாரு என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.
ஆக, விடாத விளம்பரத்தின் மூலம், மக்கள் மனதில் தற்காலிக பதிவை ஏற்படுத்த முடியுமேதவிர, நீங்காஇடம் பிடிக்க முடியாது. மனிதகுலத்துக்கு, பெரிய அளவில், நல்லதோ, கெட்டதோ செய்த செயலின்மூலமே, மக்கள் மனதில், காலம்காலமாக நிலைத்து நிற்கமுடியும்.
உலகெமெங்கும் பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் இருக்கின்றது. வர்த்தக வியாபார அமைப்புகள், ஜாதி, மத அமைப்புகள், அரசியல் கட்சி அமைப்புகள், தொண்டு அமைப்புகள், ஆட்சி நிர்வாக அமைப்புகள், குடும்ப அமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகள் இருக்கின்றது. அந்த மாதிரியான அமைப்புகளுக்கெல்லாம், தலைமை இருக்கின்றது. அமைப்பின் தலைவர்கள் எல்லோரும், மக்கள் மனதில் இடம்பெறுவதில்லை.
டாடா, பிர்லா என்று வர்த்தக அமைப்புகளின் தலைவர்களை மக்கள், காலங்காலமாக நினைவில் நிறுத்திக்கொள்வதில்லை. மத அமைப்புகளான போப்பாண்டவர்களைகூட மக்கள் மறந்து விடுகிறார்கள். கலெக்டர்களையும், மேயர்களையும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், வட்டம், மாவட்டம் எல்லோரையும், மக்கள் எளிதில் மறந்து விடுகிறார்கள். மதுரை முத்துவைப்பற்றி கேட்டால், மக்கள் அசத்தப்போவது முத்துவை நினைவுபடுத்துவார்கள்.
அமைப்பின் தலைவர்கள், நிறைய பேர்கள் சிறப்பான நிர்வாகம் செய்து இருப்பார்கள். நிறைய பேர்கள் மிகச் சிறந்த மனிதர்களாகவும் திகழ்ந்திருப்பார்கள். ஆனால், அவர்களது நல்ல குணம், நல்ல திறமை வெளிஉலகத்துக்கு தெரியாமலே போய்விடுகிறது. அமைப்பு, நல்ல தலைவர்களை அமுக்கி விடுகிறது. உதாரணத்துக்கு, பி.ராமமூர்த்தி, அவரது கட்சி அமைப்பினால், அவரது செயல்பாடுகள், மக்கள் மனதில் இடம்பெற முடியாமல் போய்விட்டது.
ஹிட்லர், ருஷ்யாவின் ஸ்டாலின், சீனாவின் மாசேதுங் என்று ஒரு சில தலைவர்கள் மட்டுமே, வரலாற்றில், உலக மக்கள் மனதில் இடம்பெற்று இருக்கின்றார்கள். பெரும்பாலும், அமைப்பின் தலைவர்கள், மனிதகுலத்துக்கு செய்த அழிவின்மூலமே, மக்கள் மனதில், வரலாற்றில் இடம் பெறுகிறார்கள்.
வரலாற்றில் இடம்பெற்ற அமைப்பின் தலைவர்கள் அனைவரும் ஆரம்பகாலத்தில் நல்லவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். பிற்காலங்களில்தான், தாங்கள் எடுத்த தவறான முடிவினால், அவர்கள் கெட்டவர்களாக உருவெடுத்து விட்டார்கள்.
பொதுவாக, அமைப்பில், தலைவர் ஒருவர் இருப்பார். அந்த தலைவர், தன்னைச் சுற்றிலும், எப்பொழுதும் அடிமைகளை வைத்திருப்பார். அடிமைகள், தலைவர் தவறான முடிவை எடுக்கும்போது தவறைச் சுட்டிக்காட்டி சரியான வழியை எடுத்துச் சொல்ல மாட்டார்கள். அடிமைகள் சிந்திக்கும் திறனை இழந்து விடுவதால், சரி எது, தவறு எது என்று அறியமாட்டார்கள். அடிமைகளை அதிகமாக உருவாக்கினால்தான், அமைப்பே வளரும். ஆதலால், அமைப்புகளிலிருந்து, சிறந்த மக்கள் தலைவன் உருவாக வாய்பேயில்லை.
ஆக, அமைப்பின் தலைவர்கள், ஹிட்லர், ருஷ்யாவின் ஸ்டாலின், சீனாவின் மாசேதுங் என்று மக்கள் மனதில் வெறுப்பான இடத்தை அடைவார்கள். நல்லதோர் இடத்தை, மக்கள் மனதில், அமைப்பின் தலைவர்கள் அடைந்ததில்லை.
எல்லோரும், தலைவனாகியே தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை. பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொள்ளவே, தலைவன் தேவை. பிரச்சனைகளே இல்லாத நிலையில், தலைவனுக்கு அவசியமேயில்லை.
கல்லூரிகளில் ஒரு பிரச்சனையும் இல்லாதபோது, அனைவருமே மாணவர்களாக இருப்பார்கள். மெஸ்ஸில் சாப்பாடு சரியில்லை என்று பிரச்சனை எழும்பும்போது, மாணவர்களிலிருந்து தலைவன் வெளிப்படுகிறான்.
ஆக, தலைவனாக வேண்டும் என்பது, காந்தியின் வாழ்நாள் குறிக்கோள் அல்ல. மக்கள், ஆங்கிலேயருக்கு அடிமையாக இருக்கிறார்களே என்ற பிரச்சனையை, காந்தி கண்டறிந்தார். அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில், காந்தி ஈடுபட்டார். அந்த செயலினால், உலக மக்கள் மனதில் நீங்காஇடத்தைப் பிடித்தார். செத்தும், வாழ்ந்து கொண்டு இருக்கின்றார், காந்தி.
ஆங்கிலேயன் உலக மக்களை அடிமையாக்கவில்லையென்றால்; அந்தப் பிரச்சனை உருவாகமல் இருந்திருந்தால், காந்தி - தலைவனாகவேண்டிய அவசியம், தேவை இருந்திருக்காது. காந்தியும், தலைவனாக உலக மக்களின் மனதில் இல்லாமல், எல்லா மனிதரைப்போல், வாழ்ந்து போய்சேர்ந்திருப்பார்.
ஆக, பிரச்சனையில்லாத நிலையில், தலைவனே தேவையில்லை.
பிரச்சனைகள்தான் தலைவர்களை மக்கள்முன் நிறுத்துகிறது. பிரச்சனையை ஞானத்தால், யார் பார்க்கின்றார்களோ, அவரே தலைவராகிறார். அந்த பிரச்சனையின் ஆழம் அறிந்து, அதற்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும்போது, அந்த தலைவர், மக்களின் மனதில் நீங்காஇடம் பிடித்து, நிறைந்து நிற்கின்றார்.
இந்தியாவின் இன்றைய பிரச்சனை, அரசாங்க அமைப்பு.
குடும்ப அமைப்பு, முன்பு கூட்டுக் குடும்பமாக இருந்தது; பிறகு தனிக்குடித்தனம்; பிறகு தனி ஆள், ஒரு வளர்ப்பு பிராணி என்று மாற்றம் அடைந்து வருகிறது.
அரசாங்க அமைப்பு, எந்தவித மாற்றமுமில்லாமல், பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
நகர அரசாங்கம் - மக்களின் தேவையை நிறைவேற்றவில்லை; மாநில அரசாங்கம் - மாநிலத்தின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை; தேசிய அரசாங்கம் - தேசத்தின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை.
இதுதான் இன்றைய பிரச்சனை.
அரசாங்க அமைப்பின் குறைகளை, யார் உணருகிறார்களோ, அவர்களே மக்கள் தலைவர்களாக உருவாகுவார்கள். அரசாங்க அமைப்பின் குறைகளை, நிவர்த்தி செய்யும் முயற்சியில், யார் ஈடுபடுக்கின்றாரோ, அவரே மக்களின் தலைவர்.
ஆக, அமைப்பே தேவையில்லை. அமைப்பின் தலைவர்கள், மக்கள் மனதில் இடம்பெற முடிவதில்லை. பிரச்சனையே - தலைவர்களை மக்கள் முன் நிறுத்துகிறது. பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுபவரே - மக்கள் தலைவராகிறார்.
திருவள்ளுவர், காலங்காலமாக உலகமக்களின் மனதில், என்றும் வாழ்கின்றார். திருவள்ளுவர், மனிதகுலத்துக்கு ஆற்றிய ஒரே தொண்டு - திருக்குறள் படைத்தது. திருவள்ளுவர் காலத்தில் இருந்த மிகப்பெரிய பிரச்சனை - ஒழுக்கமின்மை ஆகும். அந்த பிரச்சனைக்கு தீர்வுகாண, திருக்குறளைப் படைத்தார். திருவள்ளுவர், கட்சியையோ, மதத்தையோ, எந்தவித அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், அவரது திருக்குறளைப் படித்து, மெய்ப்பொருள் காண்பதைவிட்டுவிட்டு , புத்தரின் பெயரால் மனிதகுலம் அழிக்கப்படுவதைப்போல், திருவள்ளுவரின் பெயரால் ஒழுக்கமின்மை ஓங்கி வளர்ந்து நிற்கும்.
கண்ணதாசன், மக்கள் மனதில் வாழ்கின்றார். அர்த்தமுள்ள இந்துமதத்தைவிட, வாழ்வின் உண்மையை, எளிதாக எடுத்துச் சொன்னார். “வீடுவரை உறவு. வீதிவரை மணைவி. காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ.” அவ்வளவுதான் வாழ்க்கை. அன்றைய சமுதாய பிரச்சனை - ஆடம்பரம், போலித்தனம், பொய், பித்தலாட்டம் என்று எங்கும் நிறைந்திருந்தது. கண்ணதாசன் - அமைப்பை ஏற்படுத்தவில்லை.
அமைப்புகளை உருவாக்காமல் இருப்பது - பாராட்டப்பட வேண்டிய விசயம். ஆனால், அதையும்விட, சிறப்பாக வளர்ந்து கொண்டு இருந்த அமைப்பை - கலைப்பதென்பது, மனித வரலாற்றிலே வேறு யாரும் செய்யாத செயல். காங்கிரஸை, சுதந்திரம் அடைந்தபின், காந்தி கலைக்க முயன்றார். காந்தியின் சொல்லை, அவரது சீடர்கள் கேட்கவில்லை.
இருக்கும் அமைப்பை கலைக்க, உண்மையை முழுவதுவமாக அறியவேண்டும். பிறகு, மனதில் உறுதி வேண்டும். அதன்பிறகு, மனதில் தைரியத்தோடு, சரியெனப்பட்டதை, நிறைவேற்றிட வேண்டும். அது, ஜெ.கிருஷ்ணமூர்த்தியால் மட்டுமே முடியும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி மட்டும், அமைப்பை கலைக்காமல் இருந்திருந்தால், அவரது அமைப்பு, உலகமெங்கும் ஒரு மதம்போல் உருவாகி இருக்கும். ஜெ.கிருஷ்ணமூர்த்தியை குருவென்று சொல்லி, பின்லேடன்போல், ஆட்கள், அவரது அமைப்பிலிருந்து உருவாகியிருந்திருப்பார்கள்.
இன்றைக்கு, ஜெ.கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி பேசுவதைவிட, அவரது சொல்லில் உள்ள மெய்ப்பொருளைத்தான் , உலகமக்கள் அறிய முயற்சி செய்கிறார்கள்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி உணர்ந்த பிரச்சனை - உலகமக்கள், பல்வேறு அமைப்புகளில்சிக்கி அடிமையாக, வாழ்க்கையை வாழமுடியாமல் தவிக்கின்றார்கள். உலகமக்களின் விடுதலைதான், தன்னோட நோக்கம், குறிக்கோள் என்று அவர் செயலாற்றினார்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி, உலகமக்களின் மனதில் என்றும் வாழ்கிறார்.
That is Life after Death.
மாற்றங்கள்
உருவாகும் இடம்
உள்ளம்; வெளியில்
அல்ல.
Does Manmohan have Stability?
Here is the result of the Number Game:
May ArticlesIts not UPA anymore; Its Congress government.
April Articles
March ArticlesEmerging Regional Leaders
February Articles
January Articles